Thursday 4 January 2018

03.01.2018 - வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை

வடலூர் தருமச்சாலையில் இன்று அன்னதான சேவை செய்யும் 20 க்கும் மேற்பட்ட தீபம் சேவடிகளை தீபம் நிர்வாகம் வாழ்த்தி வணங்கி மகிழ்கிறது.

இரண்டு இரவுகள் பயணம்...
நாள் முழுவதும் சேவை...

20 சேவடிகளுடன் வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையிலிருந்து
வடலூர் சத்திய தருமச்சாலைக்கு
தொண்டு செய்ய  புறப்பட்ட வாகனம்...






Tuesday 2 January 2018

வடலூரில் சத்திய அன்ன தருமச்சாலையில் 50வது மாத சேவை

மாத பூசம்: 3.1.18.

சென்னை வேளச்சேரி "தீபம் அறக்கட்டளை"யின்  வடலூர் மாதபூச ஜோதி திருநாளை முன்னிட்டு  இன்று  2-1-2018 புதன்கிழமை இரவு  சேவடிகளுடன் வடலூர் சத்திய தருமச்சாலையில் அன்னதான சேவைக்காக  வாகனம் (ஸ்லீப்பர் கோச்) புறப்படுகிறது.

வேனுக்கு கட்டணமில்லை.

வாய்ப்பு முதலில் பதிவு செய்யும் 20 பேருக்கு மட்டும்...

For advance booking pl call:04422442515

Deepam Trust
Velachery
Chennai

Monday 1 January 2018

01.01.2018 - பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம்

திருஅருட்பா முற்றோதல் நிறைவு முன்னிட்டு பல்லாவரத்தில் 200 க்கும் மேற்பட்ட பார்வை அற்றவர்களுக்கு அன்னதானம் வழங்கிய போது எடுத்த படம்.




அன்னம் உபயம் அளித்தவர்:
பேராசிரியர் முத்துகுமரன் மற்றும் தேன்மொழி முத்துகுமரன் தம்பதியினர்
தீபம் அறக்கட்டளை சார்பில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

01.01.2018 - திருஅருட்பா ஆறாம் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சி

சென்னை வேளச்சேரி நித்ய தீப தருமச்சாலையில் திருஅருட்பா ஆறாம் திருமுறை முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான ஆன்மநேய அன்பு உள்ளங்களை படத்தில் காணலாம்.








இந்த திருஅருட்பா முற்றோதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயவு தனலட்சுமி அம்மா அருள்ஜோதி அன்ன ஆலயம் மற்றும் குழுவினர் பெரம்பூர் , தயவு.தமிழ்த்தூதன் அய்யா வேதாரண்யம்,  தயவு.கருணை கோவிந்தசாமி சென்னை, தயவு. அண்ணாமலை அய்யா தேவதானம்பேட்டை விழுப்புரம், தயவு.திருமாவளவன் அய்யா மேடவாக்கம், தயவு.மொழியரசி அசோகன் தம்பதியினர் சைதாப்பேட்டை, தயவு.தண்டபாணி அய்யா செந்நெறி ஆசிரியர் அண்ணா நகர், தயவு.இராஜேஷ்குமார் தர்மபுரி,  தயவு. கலை சித்ரா ஆறுமுகம் தம்பதியினர் உள்ளகரம், தயவு.கிருஷ்ணமூர்த்தி அய்யா குழுவினர் ஏலக்குறிச்சி அரியலூர், பிரம்மஶ்ரீ ஆனந்தன் சென்னை, ப்ரம்மஶ்ரீ செந்தில்நாதன் வேளச்சேரி, தயவு.சன்மார்க்க அருணகிரி அயன்புரம், தயவு.மகாதேவன் பல்லாவரம், தயவு ஆடலரசு சிவனடியார் திருக்கூட்டம் வேளச்சேரி, தயவு.இரவிச்சந்திரன் கெங்கவரம், தயவு.முத்துகுமரன் பேராசிரியர் செம்பாக்கம், தயவு.பாண்டுரங்கன் ஷெனாய் நகர், தயவு. வேல்முருகன் சோழிங்கநல்லூர், தயவு.பாரதி, தயவு கணபதி,  தயவு. பொன்யணி அய்யா சென்னை, மற்றும் பல பகுதியில் இருந்து சன்மார்க்க சொந்தங்களும், சிவநேயச்செல்வர்களும் திரளாக கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து ஆன்மநேய உள்ளங்களுக்கும் தீபம் அறக்கட்டளையின் சார்பில் கோடானு கோடி நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

அகவல் சொல் பிரித்த வடிவம்

1 அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ்ஜோதி 3 அ ருள் சிவ நெறி சார் அருள் பெரு நிலை வாழ்   அருள் சிவ பதி ஆம் அருட்ப...